தமிழ் வேதாகம ஆராய்ச்சி மையம்

தமிழ் வேதாகம ஆராய்ச்சி மையம் வேதஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமாரினால் 2005ல் இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டது. வேதாகமப்புத்தகங்களுக்குத் தமிழ் மொழியில் விளக்கவுரைகள் எழுதி வெளியிடுவதே  இந்த ஆராய்ச்சி மையத்தின் முக்கிய செயற்பாடாகும்.

இலங்கையில் இருபது வருஷங்களாக வேதாகமக் கல்லூரியின் விரிவுரையாளராகவும் கிறிஸ்தவ சஞ்சிகையின் ஆசிரியராகவும் இறைபணியாளராகவும் பணியாற்றிய எம்.எஸ்.வசந்தகுமார் 40ற்கும் அதிகமான ஆராய்ச்சி நூல்களைத் தமிழ் மொழியில் எழுதி வெளியிட்டுள்ளார்.

இந்த இணைய தளம் வேத ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமார் அவர்களின் வேதாகம ஆராய்ச்சியில் உருவாகும் வேத விளக்கங்களை உங்களுக்கு தருகிறது. உங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் அனுப்பி வையுங்கள். பதில்களை உங்கள் கேள்விகளுக்கு பதில்கள் பகுதியில் பார்க்கவும்


Tamil Bible Research Centre

The Tamil Bible Research Centre was founded in 2005 by M.S.Vasanthakumar, Biblical Scholar and Researcher to produce Study Aids and Commentaries on the Tamil Bible.

M.S.Vasanthakumar has been involved in Christian ministry for more than twenty years. He has been teaching and training Christian ministers, and lay people and editing a Tamil Christian magazine in Sri Lanka until he formed the Tamil Bible Research Centre in England. He has written more than 40 books and several study materials and contributed numerous scholarly articles to Tamil magazines and English Journals.

This website will bring you the study materials which will be produced by M.S.Vasanthakumar through The Tamil Bible Research Centre, England.


அறிமுகம்

1962ம் ஆண்டு ஒரு பாரம்பரியக் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த வேத ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமார் 1983ம் ஆண்டில் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றத் தொடங்கினார்.

இதன் பின்னர் 1984 முதல் 1988 வரை இலங்கை வேதாகமக் கல்லுரியில் படிக்கும் காலத்திலேயே வேதாகமத்தை ஆழமாக ஆராய்ச்சி செய்து வந்த இவர் 1985ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டுவரை இலங்கை வேதாகமக் கல்லுரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியதோடு இலங்கையிலிருந்து வெளியாகும் சத்தியவசனம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் உலகின் பல நாடுகளில் வேதாகமக் கருத்தரங்குகள் நடத்துகிறவராகவும் இருந்தார்.

இவற்றிற்கு இடையில் 1996 முதல் 2001வரையிலான காலப்பகுதியில் இங்கிலாந்தில் தனது இறையியல் உயர் கல்வியை மேற்கொண்டார். 2005ம் ஆண்டிலிருந்து லண்டன் நகரிலுள்ள இம்மானுவேல் கிறிஸ்தவ ஐக்கியம் சபையில் இறைபணியாற்றும் இவர் தமிழில் வேதஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிடுவதோடு பல நாடுகளில் வேதாகமத்தைப் போதித்தும் வருகின்றார்.

வேதாகமத்தைத் தமிழ்க் கிறிஸ்தவர்கள் சரியானவிதத்தில் புரிந்துகொள்ளவேண்டும் என்னும் மனப்பாரத்துடன் வேதாகமத்தை ஆராய்ச்சி செய்வதற்குத் தன்னை அர்ப்பணித்துள்ள எம்.எஸ்.வசந்தகுமார் இதுவரையில் 40ற்கும் அதிகமான வேதஆராய்ச்சி நூல்களையும் இறையியல் பாடக்குறிப்பு நூல்களையும் எழுதியுள்ளளோடு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்குகின்றார்.